ωєℓ¢σмє тσ συя вℓσggєя ѕιтє........
ᴏᴜʀ ᴄʜᴀᴛ sɪᴛᴇ ➵ʜᴏɴᴇʏᴄʜᴀᴛ.ᴄᴏᴍ ღღ

Thursday, April 2, 2020

ஏக்கத்துடன் நான்...

சிட்டுக்குருவி சிறகடிக்கும் பொழுதெல்லாம்
உன் இமைகள் அசைவின் நினைவடி ..
கடலின் அலை வரிசை தோற்றுப்போனதடி
உன் கால்கொலுசின் அலை வரிசையினிலே
மெய் சிலிர்த்துப் போனேனடி உறவே..
உன் மைவிழி பார்வை கண்டபின்

காட்டுத்தீயும் கட்டுக்குள் அடங்குமடி
உன் குளிர்ந்த கண்கள் கண்டால் ..
பட்டுச் சேலை நீ உடுத்தி பக்குவமாய்
நடக்கும்போது படபடக்குதடி என் இதயம்❤️..

அன்னையை உணர்ந்தேனடி உன் அன்பில்
தந்தையை உணர்ந்தேனடி உன் அறிவுரையில்...

குயிலோசை கேட்குதடி கண்ணம்மா - உன்
சிரிப்பினை கேட்கும் ஒவ்வொரு பொழுதும்..
எட்டா உயரத்தில் நீ இருந்தும்
எட்டிப்பறிக்க நினைக்குதடி என் மனது..

கீழ்வானம் சிவக்கும் நேரம் கறிச்சாங்குருவி கூச்சலிட மெல்லநடை போடுதடி நம் கால்கள்.
நீரோடை இசை அமைக்க கவிபாடும் தென்றலோடு காதல் செய்வோமாக கண்மணி.. காதல் செய்வோமாக கண்மணி🥰

WRITTEN BY SILENT BOY 

No comments:

Post a Comment