மழை நின்றும் தூறும் மலர் சென்றும் வாசம் கார் சூழும் வானம் குயில் பேசும் கானம் நின் அழகும் விஞ்சும் இவை யாவும் கொஞ்சம் உந்தன் வாசம் எங்கும் என்றே ஏங்கும் சுவாசம்
அம்மா
பெண்ணுறுப்பை பிளந்து எடுத்து வளர்த்தெடுத்தாள் உன்னை, இதழ் தீண்டி முத்தமிட நின்னழகைப் பார்க்கவில்லை,
சிற்றின்ப சுகம் காண கொங்கைகளை தரவில்லை, வீடு, வாசல், பொன் பொருள், உணவு ஏதும் எதிர் நோக்கவில்லை. பாட்டி
தமக்கை ,தோழி காதலி, தாரம், மாமியார் மைத்துனி, மகள், பேத்தி இதில் தாழ்ந்தவர் யாருமில்லை தாயன்பின் தூய்மைக்கு நிகர் ஏதும் இல்லை!!
ஆயிரம் தியாகங்கள்! லட்சம் உணர்வுகள்!! கோடி வலிகள்!!! எண்ணிலடங்கா நேசங்கள்!!!! ஒரே சொல்! அம்மா💝!!!
மூச்சடக்கிப் பெற்றெடுத்து சீராட்டிப் பாலூட்டி கதை நூறு நிதம் சொல்லி இடர் ஏதும் அண்டாமல் சுடராக வழிநின்று சிலை ஏதும் கேட்காமல் சிறப்பாக எனை மாற்றி இன்றளவும் எனைத் தாங்கும் உனை நானும் மறப்பேனாே என் தேகம் மரித்தாலும்
முகம் அது மயிலோ தெரியவில்லை குரல் அது குயிலோ கேட்டதில்லை அகம் அது யாரோ தெரியவில்லை அவள் செய்வதோ என்னில் தொல்லை ----காதல் தொல்லை
No comments:
Post a Comment