காமமும் காதலின் ஒரு பகுதிதான் என்றால்,
அதுவன்றி கசந்ததோ.. அளவின்றி இனித்ததால் திகட்டியதோ...
காதலோ காமமோ பிரிவில் உணர்த்தும்.
என் காதலோ நீ இன்றி தவிக்கிறது,
உன் மனமோ அதை உணர மறுக்கிறது!!!
-Hunki
நம் காதல் குழந்தை*
முதல் முத்தத்தில் சட்டென்று பிறந்தது. கனம் இல்லாமல் தவழ்ந்து திரிந்தது. உன் அணைப்பினிலே அகம் நெகிழ்ந்தது. எழ முயன்று விழுந்து அழுதது. காயத்துடன் உன் கரங்களைத் தேடியது. காணவில்லை என்றவுடன் வெம்பியது. தேற்றிக்கொண்டு தானே எழுந்தது. அன்னையின்றி என்னிடம் அனாதை ஆனது.
-Hunki
Nice
ReplyDelete