ωєℓ¢σмє тσ συя вℓσggєя ѕιтє........
ᴏᴜʀ ᴄʜᴀᴛ sɪᴛᴇ ➵ʜᴏɴᴇʏᴄʜᴀᴛ.ᴄᴏᴍ ღღ

Wednesday, May 27, 2020

writer - Hunki

மாறும் கனவுகள்

அன்று நாம் கண்டது ....
ஒரு குடையில் பெருமழையில் செல்ல. இன்று நான் காண்பது... ஒரு கணத்தில் நீ விழியசைத்துச் சொல்ல.



*காதல் மலர்*

வாழ்வின் ஆதியாய் என்னில் வந்தாயே, வாடைக் காற்றின்றி சிலிர்க்க வைத்தாயே. வாஞ்சையுடன் எனைத் தழுவி அணைத்தாயே, வானுயர நான் பறந்தேன் அக்கணமே. வாடிய போதெல்லாம் ஓடோடி வந்தேனே, வாசலும் தாண்டி கூட்டிச் சென்றாயே. வாராது இனி அக்கனவு என்கிறாயே, வாசம் இழந்து போகாதே காதல் மலரே!! -


*நவீன ஒருதலைக் காதல்*

மெய்நிகர் உலகினில் எனக்காய் வந்தாய் மெல்லிசைப் பாடலை அனுப்பி வைத்தாய் மென்குரல் மட்டுமே கொடுத்து வந்தாய் மெல்லியப் புன்னகை உதிர்க்கச் செய்தாய் மெய்யான நேசமும் கொஞ்சித் தந்தாய் மெச்சும் வாழ்வு நமக்கு என்றாய் மென்பொருள் உலகமே வியக்கும் என்றாய் மெதுவாய் உணர்வினை சொல்லில் வளர்த்தாய் மென்சிட்டு நீயோ பறந்து சென்றாய் மெலிந்தே போகின்றேன் மெழுகாய் நானும்!!

points ah
27/05

No comments:

Post a Comment